144 தடை சட்டம்‌ அமலில்‌ உள்ள காலத்திலும்‌ பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர்‌ கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: தமிழகத்தில்‌ 144 தடை சட்டம்‌ அமலில்‌ உள்ள காலத்திலும்‌ பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர்‌ கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில்‌ 144 தடை சட்டம்‌ அமலில்‌ உள்ள காலத்திலும்‌ பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர்‌ கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் பாரத பிரதமர் வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் குடிநீர்‌ அளவு, தரத்தினை அவ்வப்போது பணியாளர்கள்‌ பராமரிக்கவும்‌ குழாய்‌ உடைப்புகள்‌ மற்றும்‌ பழுதுகளை உடனுக்குடன்‌ சரிசெய்யவும்‌ உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

இருப்பினும்‌, பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ குடிநீரின்‌ அளவு மற்றும்‌ தரத்தில்‌ ஏதேனும்‌ குறைபாடு தெரிந்தால்‌ 94458 02145 என்ற எண்ணை அழைத்தோ அல்லது https://www.twadboard.tn.gov.in/ à®Žà®©à¯à®± இணையதளத்திலோ குடிநீர்‌ வாரியத்தில்‌ புகார்‌ அளிக்கலாம்‌ என தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...