ஏப்ரல்‌ 15ம் தேதிக்கு பிறகு ரயில்‌ பயணம்‌ மேற்கொள்ள இணையவழியில்‌ முன்பதிவு துவக்கம்

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி, 21 நாட்கள்‌ ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்‌ என உத்தரவிட்டார்‌. இதனை தொடர்ந்து ஏப்ரல்‌ 14ம்‌ தேதி வரை ரயில்‌ சேவைகள்‌ ரத்து செய்யப்பட்டது.


நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி, 21 நாட்கள்‌ ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்‌ என உத்தரவிட்டார்‌. இதனை தொடர்ந்து ஏப்ரல்‌ 14ம்‌ தேதி வரை ரயில்‌ சேவைகள்‌ ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்‌, ஏப்‌.14ம்‌ தேதிக்கு பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும்‌ திட்டமில்லை என மத்திய அரசு சமீபத்தில்‌ அறிவித்தது. இதையடுத்து இந்திய ரயில்வே, வரும்‌ 15ம்‌ தேதி முதல்‌ ரயில்‌ பயணச்சீட்டுக்கான முன்பதிவைத்‌ துவங்கியுள்ளது. ஆனால்‌, முன்பதிவு மையங்களில்‌ ஏப்‌.15ம்‌ தேதி காலை முதல்‌ முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர்‌ கூறுகையில்‌ "இது தற்போதைய நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும்‌, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்‌ அதற்கேற்ப திட்டம்‌ மாற்றியமைக்கப்படும்‌" என தெரிவித்தார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...