அரசின் நிவாரணத்தொகை பெற சாலையோர வியாபாரிகள் தாமாக முன் வந்து விபரங்களை தர கோவை மாநகராட்சி வேண்டுகோள்

கோவை: கொரோனா தொற்றினால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வியாபாரிகளே தாமாக முன்வந்து தகவல்களை தர கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கொரோனா தொற்றினால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வியாபாரிகளே தாமாக முன்வந்து தகவல்களை தர கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவிவரக் கூடிய நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 110 விதியின்படி தமிழக அரசு சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இதன்படி கோவை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள 6169 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக அவர்களது வங்கிகணக்கில் வழங்குவதற்காக தலா 1000 ரூபாய் வீதம் என 61 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, சாலையோர வியாபார அடையாள அட்டை, நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களை தெரிவித்து, தாங்களாகவே முன்வந்து மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422-2302323, கிழக்கு மண்டலம் 0422- 2577056, மேற்கு மண்டலம் – 0422 – 2551700, தெற்கு மண்டலம் 0422- 2252482, வடக்கு மண்டல அலுவலகம் 0422- 2243133, மத்திய மண்டல அலுவலகம் 0422- 2215618 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக உடனடியாக தொடர்பு கொண்டு தகவல்களை மாநகராட்சிக்கு தெரிவிக்குமாறு ஆணையர் ஷ்ரவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...