சென்னையில் இருந்து கேரளாவிற்கு நாளை முதல் மே 3ம் தேதி வரை பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்!

கோவை: சென்னையில் இருந்து கேரளாவிற்கு நாளை முதல் மே 3ம் தேதி வரை பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கோவை: சென்னையில் இருந்து கேரளாவிற்கு நாளை முதல் மே 3ம் தேதி வரை பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நாளை 19.04.2020 முதல் 03.05.2020 வரை பார்சல் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 00653 சென்னையிலிருந்து கேரள மாநிலம் சொரனூர் வரையும், வண்டி எண் 00654 சொரனூரிலிருந்து சென்னை வரையும் இயக்கப்படவுள்ளது. (கொள்ளளவு-31 டன்).

சென்னை, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, ஊத்துகுளி, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர் என இருவழியிலும் வண்டி நிற்கும் இடங்களாகும். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்கிறோம். 

தாங்கள் சரக்குகளை மேற்கண்ட ஊர்களுக்கு அனுப்ப விரும்பினால் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் இரயில்வே பார்சல் அலுவலகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு கோயமுத்தூர்-7012592712, திருப்பூர்-9543152339, ஈரோடு-9443990801, சேலம்-9443840720 எண்களை தொடர்பு கொள்ளவும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...