நீலகிரியில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தாத கடைகள் பூட்டி சீல்‌ வைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரியில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தாத கடைகள் பூட்டி சீல்‌ வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நீலகிரி: நீலகிரியில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தாத கடைகள் பூட்டி சீல்‌ வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

காய்கறிக்‌ கடைகள்‌, மளிகைக்‌ கடைகள்‌, வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ (பாத்திரக்‌ கடைகள்‌) பேக்கரிகள், மருந்தகங்கள், இறைச்சிக்‌ கடைகள்‌, பழக்‌ கடைகள்‌, அச்சகங்கள்‌, ஹார்டுவோ்ஸ்‌, சிமெண்ட்‌, கட்டுமானப்‌ பொருட்கள்‌, மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் செயல்படலாம். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகளும் மாவட்ட சூழலுக்கேற்ப அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

அதேசமயம், தேநீர்‌ கடைகள்‌, துணிக்கடைகள்‌, நகைக்‌ கடைகள்‌, முடி திருத்தம், அழகு நிலையங்கள்‌ (பியூட்டி பார்லர்‌), திரையரங்குகள்‌, தங்கும்‌ விடுதிகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், டெய்லரிங்‌ கடைகள்‌ உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள்‌, கடைகள்‌ தங்கள்‌ பகுதியை நாள்தோறும்‌ கிருமி நாசினியை கொண்டு இருமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும்‌ எனவும் நிறுவனப்‌ பகுதியில்‌ உள்ள கழிவறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும்‌ ஒரு முறை கிருமி நாசினியைக்‌ கொண்டு சுத்தம்‌ செய்யப்பட வேண்டும்‌ என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

அதேபோல, பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ கட்டாயம்‌ முகக்‌ கவசம்‌ மற்றும்‌ அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்‌ எனவும் பணியாளா்கள்‌ தொடர்ச்சியாக கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்‌. அல்லது சாணிடைசர்‌ பயன்படுத்த வேண்டும்‌. கடை/நிறுவனங்களின் உரிமையாளர்கள்‌ 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்‌ நிலை சரியில்லாதா பணியாளர்களை பணிக்கு அமர்த்தக்‌ கூடாது. 200 நபர்களுக்கு மேல்‌ பணிபுரியும்‌ நிறுவனங்கள்‌ கட்டாயம்‌ மருத்துவர்‌ ஒருவரை நியமிக்க வேண்டும்‌.

மேலும், கடை/நிறுவன உரிமையாளர்கள்‌ கடைக்கு முன்பாக சமூக இடைவெளியைப்‌ பின்பற்றும்‌ வகையில்‌ உரிய அடையாளக்‌ குறியீடுகளை தகுந்த இடைவெளிவிட்டு குறிக்க வேண்டும்‌. இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும்‌ படைகள்‌ மாவட்டத்தில்‌ அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ ஆய்வு மேற்கொள்வார்கள்‌. சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும்‌ முகக்‌ கவசம்‌ அணியாத வாடிக்கையாளர்கள்‌ மீது வழக்கு தொடர்வதுடன்‌, அபராதம்‌ விதிக்கப்படும்‌. போதிய சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தாத கடைகளை பூட்டி சீல்‌ வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள்‌ அத்தியாவசியத்‌ தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும்‌ போது கட்டாயமாக முகக்‌ கவசம்‌ அணிய வேண்டும்‌ எனவும் கடைகளில்‌ சமூக இடைவெளியைப்‌ பின்பற்றி பொருட்களை பெற்றுச்‌ செல்லுமாறு கேட்டுக்‌ கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...