கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ கொரோனா நோய்‌ தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்படுகிறது - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அறிவுறுத்தலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ கொரோனா நோய்‌ தொற்றுத்தடுப்பு அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி செயல்படத்‌ துவங்கியுள்ளன.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. அறிவுறுத்தலின்படி, கோவை

மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ கொரோனா நோய்‌ தொற்றுத்தடுப்பு அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி செயல்படத்‌ துவங்கியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சியின்‌ வளர்ச்சிப்‌ பணிகளுக்கு பொதுமக்களின்‌ ஒருங்கிணைந்த பங்களிப்பு எப்போதும்‌ சிறப்பாக இருக்கும்‌. அதுபோல்‌ கடந்த

2019-2020-ம்‌ நிதியாண்டு காலத்திற்குண்டான பொதுமக்கள்‌ மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, குடிநீர்‌ கட்டணம்‌, தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை எதிர்வரும்‌ ஜீன்‌ 30ம் தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.

பொதுமக்கள்‌ வரி செலுத்த ஏதுவாக மாநகராட்சியின்‌ ஐந்து மண்டலங்களிலும்‌ 29 வரிவசூல்‌ மையங்களும்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை (சனிக்கிழமை உட்பட) செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில்‌ வங்கி கடன்‌ அட்டை (Credit card), வங்கி பற்று அட்டை (Debit card), வரைவோலை (Demand Draft) மற்றும்‌ காசோலை (Cheque) ஆகியவற்றின்‌ மூலமும்‌ பொதுமக்கள்‌ பணம்‌ செலுத்தலாம்‌.

மேலும்‌, https://www/ccmc.gov.in என்ற இணையதள முகவரியிலும் பொதுமக்கள்‌ தங்களின்‌ சொத்துவரி, காலியிட வரி, குடிநீர்‌ கட்டண நிலுவைகளை செலுத்தலாம்‌. வரி செலுத்துவது தொடர்பாக ஏதேனும்‌ சந்தேகங்கள்‌ இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரியை தொடர்பு கொள்ளலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...