வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்டவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


டெல்லி: ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்டவை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கின் போது பலரின் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை புதுப்பிக்கும் தேதி முடிவடைந்ததுள்ளது.

இந்நிலையில், ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும்‌ செப்டம்பர்‌ 30ம்‌ தேதி வரை வாகன உரிமம்‌ செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...