தமிழகத்தில் நாளை முதல்‌ ஜூன்‌ 30ம்‌ தேதி வரை மண்டல பொது போக்குவரத்துக்கு தடை - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகம்‌ முழுவதும்‌ நாளை முதல்‌ வரும் ஜூன்‌ 30ம் தேதி வரை மண்டல பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்‌.

சென்னை: தமிழகம்‌ முழுவதும்‌ நாளை முதல்‌ வரும் ஜூன்‌ 30ம் தேதி வரை மண்டல பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்‌.

தமிழகத்தில்‌ கொரோனா வைரசின் தாக்கமானது நாளுக்கு நாள்‌ கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டு குணமடையும்‌ நபர்களின்‌ எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும்‌, உயிரிழப்புகள்‌ அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில், நாளை முதல்‌ வரும் ஜூன்‌ 30ம் தேதி வரை மண்டல பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்‌.

மேலும்‌, அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளாகவே இனி போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்‌ எனவும் மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ செல்வது என்றால்‌ இ-பாஸ்‌ பெறவேண்டியதுகட்டாயம்‌ என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்‌.

அதேபோல, மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதியில் அரிசி அட்டை வைத்துள்ள குடும்ப தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும், சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை மற்றும் மகனுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...