#Breaking: ஜூலை மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது : டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள ஜூலை மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



சென்னை: முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள ஜூலை மாத ஞாயிற்றுகிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 94,094 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் இந்நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 

அதோடு ஊரடங்கு காலக்கட்டத்தின் போது உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் உள்ளிட்ட எந்தவித கடைகளும் இயங்காமல் முழு ஊரடங்கு அமலாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஊரடங்கு அமலில் உள்ள ஜூலை மாதத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது 5, 12, 19, 26 ஆம் தேதி என நான்கு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...