வெளியூர் சென்று திரும்புவர்களால் நீலகிரியில் அதிகரிக்கும் கொரோனா; தேவையின்றி மக்கள் வெளியில் வரவேண்டாம் - மாவட்ட நிர்வாகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும், இதனால் தேவையின்றி வெளியில் தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வெளியூர் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும், இதனால் தேவையின்றி வெளியில் தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில்‌ நேற்றைய தினம்‌ 150 நபர்களுக்கு கொரோனா நோய்த்‌ தொற்று உறுதியாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில்‌ 5 நபர்கள்‌ வேறு மாவட்டத்திற்கு மாற்றம்‌ செய்யப்பட்டதைத்‌ தொடர்ந்து, 145 நபர்களுக்கான திருத்தியப்‌ பட்டியல்‌ இன்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இன்று மேலும்‌ 5 நபர்களுக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து, மொத்தம்‌ 150 நபர்களுக்கு மாவட்டத்தில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள்:-

1. ஜுப்லிசாலை, கேத்தி பேரூராட்சி யில் தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய 50 வயதான ஆண்

2.ஆர்‌.கே.எஸ்‌.மண்டி, கேத்தி பேரூராட்சி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய 14 வயது சிறுமி

3. ஜுப்லி சாலை, கேத்தி பேரூராட்சி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வருகிறார்கள்‌. அங்கு பணி புரிந்த அலுவலரின்‌ முதல்‌ நிலைத்‌ தொடர்புடய 52 வயதான ஆண்.

4. ஜுப்லி சாலை, கேத்தி பேரூராட்சி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய 20 வயதான இளைஞன்

5. அரசு மருத்துவமனை சாலை, உதகை நகராட்சி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய 33 வயதான பெண்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 49 நபர்கள்‌ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ள 101 நபர்களில்‌ 74 நபர்கள்‌ உதகை அரசு மருத்துவமனையிலும்‌, 7 நபர்கள்‌ குன்னூர்‌ அரசு மருத்துவமனையில்‌, 20 நபர்கள்‌ இ.எஸ்‌.ஐ. கோவை மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையிலும்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தைப்பொறுத்தவரை இன்றைய தினம்‌, வெளியூர்‌ சென்று வந்தவர்களுக்கு அதிகளவில்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்‌, பொதுமக்கள்‌ அத்தியாவசிய மருத்துவத்‌ தேவைகளைக்‌ தவிர்த்து, குடும்ப விழாக்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், இதற்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...