வெளி மாநிலங்களில் இருந்து வரும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் - கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவைக்கு வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு பணிபுரிய வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என உறுதியான பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை: கோவைக்கு வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு பணிபுரிய வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என உறுதியான பின்னரே மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக தொழில் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டம் தொழில் நகரம் என்பதால் அங்குள்ள தொழில் நிறுவனங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர், சூலூர், மதுக்கரை மற்றும் பொள்ளாட்சி வட்டங்களுக்குட்பட்ட பகுதியில் செயல்பட்ட தொழில் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது மக்களிடைய பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதை கட்டுப்படுத்த, இனி வரும்.நாட்களில் அனைத்து தொழில் நிறுவனங்களும், வெளிமாநில மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து பணிபுரிய வரும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொற்று இல்லை என உறுதியான பிறகே கோவை மாவட்டத்திற்குள் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் முறையான வழிமுறைகளையும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளையும் பின்பற்றுகிறார்களா? என தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர்கள், தொழில் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் ஆய்வு செய்திடவும், கண்காணிக்கவும் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...