கோவை மாவட்டத்தில் இதுவரை 71,293 பேருக்கு கொரோனா பரிசோதனை - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் போன்றவற்றில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், விமான நிலையம் மற்றும் பொது இடங்கள் என அப்பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவிக்கையில், ‘கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் இதுவரை 71,293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளதாகவும் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...