ஆடி அமாவாசையன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க அனுமதியில்லை - கோவில் நிர்வாகம்

கோவை: கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், வருகிற ஆடி ஆமாவசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மக்கள் வழிப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், வருகிற ஆடி ஆமாவசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மக்கள் வழிப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை நினைத்து விரதமிருந்து வணங்குவதற்கான மிக உகந்த நாளாக பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், கோவையில் 1400 இக்கும் மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், வருகிற ஆடி அமாவாசையான, ஜூலை 20 ஆம் தேதியன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி அமாவாசை அன்று, மாவட்டத்தின பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பேரூர் படித்துறையில் கூடி அவர்கள் வீட்டில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து, தர்ப்பணை விட்டு வழிபாடு செய்வார்கள்.

ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, கோவில்களில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆடி ஆமாவாசை அன்று , பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள வெள்ளிக்கிழமை அம்மன் தோப்பு பகுதி, ஆற்று படுகை, விநாயகர் கோவிலில் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு வழங்க கூடிய தர்ப்பணமும், பூஜை பரிகாரம் செய்வர்தர்க்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...