தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள்‌ கிராம நிர்வாக அலுவலரிடம்‌ கொரோனா நிவாரண தொகை பெறலாம்‌ - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில்‌ கொரோனா நிவாரண தொகையினை, இதுவரை பெறாத தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள்‌ தங்கள்‌ பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம்‌ உரிய ஆவணங்களுடன்‌ தொடர்பு கொண்டு நிவாரணத்‌ தொகை பெற்றுக்கொள்ளலாம்‌ என்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ கொரோனா நிவாரண தொகையினை, இதுவரை பெறாத தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள்‌ தங்கள்‌ பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம்‌ உரிய ஆவணங்களுடன்‌ தொடர்பு கொண்டு நிவாரணத்‌ தொகை பெற்றுக்கொள்ளலாம்‌ என்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்‌ (கோவிட்‌-19) தொற்று பரவலைத்‌ தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்‌ ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலங்களில்‌ ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம்‌ வழங்கியும்‌, பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பகுதியிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள்‌ மூலம்‌ நிவாரணத்‌ தொகை ரூ.1000,/- வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்‌, கொரோனா தடை உத்தரவு காலத்தில்‌ பிற மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள்‌ கோவை மாவட்டத்தில்‌ தேசிய அடையாள அட்டையுடன்‌ வசித்தால்‌ அவர்களின்‌ பெயர்‌ விவரங்கள்‌ தனியாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும்‌ அப்பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்‌ மூலமாக இந்த நிவாரணத்‌ தொகை வழங்கப்படும்‌.

கோவை மாவட்டத்தில்‌ கோவிட்‌-19 நிவாரண தொகை இதுவரை பெறாத தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும்‌ 10.08.2020-க்குள்‌ தங்கள்‌ பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம்‌ உரிய ஆவணங்களுடன்‌ தொடர்பு கொண்டு தொகை ரூ.1000/- பெற்றுக்கொள்ளலாம்‌ என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...