கோவையில் அரசின்‌ வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகள்‌ பூட்டி சீல்‌ வைக்கப்படும்‌ - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவையில் அரசின்‌ வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகள்‌ பூட்டி சீல்‌ வைக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவையில் அரசின்‌ வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகள்‌ பூட்டி சீல்‌ வைக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம்‌ முழுவதும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவிவரும்‌ நிலையில்‌ நோய்‌ பரவலைத்‌ தடுப்பதற்காக கோவை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்‌ மற்றும்‌ உள்ளாட்சித்‌ துறை அமைச்சர் அவர்களும்‌ கொரோனா தொற்று பரவுதலைத்‌ தடுப்பதற்காக அவ்வப்போது பொதுமக்களுக்கு காணொலி காட்சி மூலமாக பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அதன்‌ தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சியில்‌ நோய்‌ பரவலைத்‌ தடுக்கும்‌ வண்ணம்‌ இறைச்சிக்‌ கடைகள்‌, மீன்‌, கோழி கடைகள்‌ மற்றும்‌ வணிக வளாகங்கள்‌, ஷோரூம்கள்‌, (நகை, ஜவுளி), காய்கறி விற்பனைக்‌ கடைகள்‌, மார்க்கெட்டுகள்‌ மற்றும்‌ பொது இடங்களில்‌ சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌ எனவும் முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிய வேண்டும்‌. மீன்‌ கடை, இறைச்சிக்‌ கடைகளில்‌ 2 மீட்டர் இடைவெளியுடன்‌ கூடிய அடையாள வட்டம்‌ இடப்பட்டிருக்க வேண்டும்‌ என்றும் இவற்றை பின்பற்றாத கடைகளுக்கு கட்டாயம்‌ அபராதம்‌ விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து இவ்வாறு பின்பற்றாத கடைகளுக்கு பூட்டி சீல்‌ வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்‌, கடை உரிமையாளர்கள்‌ கடைக்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ முகக்கவசம்‌ அணிவதை கட்டாயமாக்க வேண்டும்‌. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌ என்பதை எடுத்துரைக்க வேண்டும்‌. இவற்றை கடைபிடிக்காத வாடிக்கையாளாகளுக்கு பொருட்கள்‌ வழங்கப்படாது என்பதை கடை உரிமையாளர்‌ எடுத்துரைக்க வேண்டும்‌. கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட அனைவரும்‌ அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்கிடுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கேட்டுக்கொண்டார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...