தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் 10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு விருப்பத்தின் பேரில் வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு விருப்பத்தின் பேரில் வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதில், ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க வழங்கப்படும் என்று தெரிவித்தது. குறிப்பாக, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் விருப்பப்பட்டால், பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆக் 1 முதல் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளியில் பயிலும், 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிக்கை வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம், என்று தகவல் தெரிவிக்கின்றது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...