நாளை முதல் குன்னூர் - உதகை இடையே, மலை ரயில் இயக்கப்படும்..! பயணிகளுக்கான நெறிமுறைகள் அறிவிப்பு

நீலகிரி: கொரோனோ தொற்று பாதிப்பால், கடந்த மார்ச், 18ல் இருந்து நீலகிரி மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: கொரோனோ தொற்று பாதிப்பால், கடந்த மார்ச், 18ல் இருந்து நீலகிரி மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் உதகையை சுற்றி பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளதால், நாளை அக்டோபர் 10ம் தேதி முதல் குன்னூர் - உதகமண்டலம் இடையே நீலகிரி மலை ரயில் தடத்தில் ரயில்களை மீண்டும் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, 2 ஜோடி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

சிறப்பு ரயில் 1:

குன்னூர்7:45

உதகை9:05

சிறப்பு ரயில் 2:

உதகை9:15

குன்னூர்10:25

சிறப்பு ரயில் 3:

குன்னூர்12:35

உதகை13:50

சிறப்பு ரயில் 4:

உதகை14:00

குன்னூர்15:10

சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான நெறிமுறைகள்.

* சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம்.

* பயணிகள் ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் போது கட்டாயம் வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படும்.

* பயணிகள் 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

* கொரோனோ தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

*பயணிகள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் தங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...