நீலகிரி மலை ரயில் சேவை தொடக்கம் மீண்டும் ஒத்திவைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

நீலகிரி: கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை, நாளை அக்டோபர் 10 ஆம் தேதி முதல், குன்னூர்-உதகை வரை மட்டும் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.


நீலகிரி: கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை, நாளை அக்டோபர் 10 ஆம் தேதி முதல், குன்னூர்-உதகை வரை மட்டும் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ரெயில் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே, தற்போது அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் வட, தென் மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலைரயிலில், பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவர். இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக, மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் மற்றும் உதகை குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் அனுமதிப் பெற்று வர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால், இம்மாதம் 10ஆம் தேதி முதல் உதகை-குன்னூர் வரை மட்டும் மலை ரயில் இயக்க, மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், மலைரயி்ல் இயக்கம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குவது குறித்து, பின்னர் அறிவிக்கப்படும், என்று தெற்கு ரயி்ல்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...