பண்டிகை காலங்களில்‌ வெளியூர் சென்று திரும்பியவர்கள்‌ கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

கோவை: பண்டிகை காலங்களில்‌ வெளியூர்களுக்கு சென்று திரும்பி வந்தவர்கள்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: பண்டிகை காலங்களில்‌ வெளியூர்களுக்கு சென்று திரும்பி வந்தவர்கள்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியின்‌ தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும்‌, மாநகராட்சி மக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தற்போது கொரோனாவின்‌ தாக்கம்‌ குறைந்து காணப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள்‌ மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும்‌, பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கியதாலும்‌ இக்கொடிய நோய்‌ கட்டுக்குள்‌ கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், நோயின்‌ தாக்கத்தை கண்காணிக்கும்‌ பொருட்டு தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர்களில்‌ இருந்து வரும்‌ நபர்களில்‌ காய்ச்சல்‌, இருமல்‌, சளி மற்றும்‌ நோய்‌ அறிகுறி உள்ளவர்கள்‌ பேருந்து நிலையங்களில்‌ பரிசோதனை செய்திட சிறப்பு முகாம்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

இதை பொதுமக்கள்‌ பயன்படுத்திக்‌ கொண்டு நோய்‌ அறிகுறிகள்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும்‌, சளி மாதிரி கொடுக்கப்பட்ட நபர்கள்‌ பரிசோதனை முடிவுகள்‌ வரும்‌ வரை தங்களை தனிமைப்படுத்திக்‌ கொள்ளவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, வெளியூர்களுக்குச்‌ சென்று திரும்பியவர்களுடன்‌ வீட்டிலோ, அல்லது பணிபுரியும்‌ இடங்களிலோ தொடர்பில்‌ இருந்தவர்கள்‌/இருப்பவர்கள்‌ தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

மேலும், கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளி பின்பற்றிடவும்‌, மாநகராட்சி எடுத்துவரும்‌ கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும்‌, அவ்வாறு முகக்கவசம்‌ அணியாமலும்‌, சமூக இடைவெளி இல்லாமலும்‌ இருப்பவர்களுக்கு அரசாணைப்படி அபராதம்‌ விதிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...