வரும் அம்மாவாசையன்று ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் இரவு பூஜை நடைபெறாது; இரவு 8 மணிக்கு கோவில் நடை மூடப்படும் - கோவில் நிர்வாகம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க, கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க, கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வர்.

தற்போது, கொரோனா காலம் என்பதால் அதிக அளவில் கூட்டம் சேர்க்க கூடாது என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து, மாசாணியம்மன் கோவிலில் அம்மாவாசை தினங்களில் இரவு நடக்கும் சிறப்பு பூஜை செய்யாமல், கோவில் வழக்கம் போல் மூடப்பட்டு விடுகிறது.

வருகிற 13-ம் தேதி, இந்த மாதத்திற்கான சர்வ அமாவாசை தினம் வருகிறது. அன்றைய தினம், கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூடி விடக்கூடாது என்பதற்காக இரவு 8 மணிக்கே, மாசாணி அம்மன் கோவில் நடை சாத்தப்படும், என்றும் அன்றைய தினம் இரவு, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்து கொள்ளலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...