திருவனந்தபுரத்திற்கு கோவை வழியாக இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில்!

கோவை: சில்சார் - திருவனந்தபுரம் இடையே கோவை வழியாக இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


கோவை: சில்சார் - திருவனந்தபுரம் இடையே கோவை வழியாக இன்று முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அசாம் மாநிலம் சில்சார் ஸ்டேஷனில் இருந்து இன்று முதல் திருவனந்தபுரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வியாழன் தோறும் இரவு 8 மணிக்கு சில்சாரில் இருந்து புறப்படும் ரயில் கௌஹாத்தி, புவனேஸ்வர், விஜயவாடா, பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கோவை வழியாக நான்காம் நாள் இரவு 8.45- க்கு திருவனந்தபுரம் செல்கிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 17ம் தேதி முதல் செவ்வாய் தோறும் மாலை 4.55 க்கு புறப்படும் ரயில் நான்காம் நாள் மாலை 4.40-க்கு சில்சார் சென்றடைகிறது. இத்துடன் இரண்டடுக்கு ஏசி வகுப்பு பெட்டிகள் ஒன்று, மூன்றடுக்கு ஏ.சி வகுப்பு பெட்டிகள் நான்கு, 13 சிவிப்பர் வகுப்பு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப்பிரிவு பெட்டிகள் இரண்டும் இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...