பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.!

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வனத்துறை அனுமதியளித்துள்ளது.

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வனத்துறை அனுமதியளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. அதன்படி, வால்பாறை செல்லும் வழியில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர்.

தற்பொழுது, கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், குரங்கு நீர்வீழ்ச்சி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறும் போது, குரங்கு நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வாகன பிரசாரம் மூலம் மது, புகைபிடித்தல், பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் முகக்கவசம் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்தனர். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...