சாலையோரங்களில் கட்டடக்கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை: மாநகராட்சி அறிவிப்பு

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பழைய கட்டடங்களைச் சீரமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என பல்வேறு கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கட்டடக் கழிவுகள் உருவாகின்றன. மாநகராட்சி சார்பாக கட்டடக் கழிவுகள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி சார்பாக மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் ஐந்து இலகுரக வாகனங்கள் கட்டடக் கழிவுகளை சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த வாகனங்கள் மூலம் கட்டடக் கழிவுகள் சேகரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 50 டன் வரை கட்டடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கட்டடக் கழிவுகள் மாவட்டத்தில் உபயோகமில்லாத கல்குவாரிகளில் உள்ள கல்குழிகளில் கொட்டப்பட உள்ளன. இனி சாலையோரங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கட்டடக்கழிகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...