கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் காரணமாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்..!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்புரம்‌ பகுதியில்‌ 24 மணிநேர குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் காரணமாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனம் மற்றும்.ஆம்புலன்ஸ் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகனங்கள் வரும் ஜனவரி 12ம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்க்கண்ட மாற்றுப்பாதையில் இயக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள்:

சாய்பாபா கோயில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலூர் - மேட்டுப்பாளையம். அல்லது சாய்பாபா கோயில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதூர் - ஜி.என் மில்ஸ் - துடியலூர்- மேட்டுப்பாளையம். அல்லது டி.வி.எஸ் -ஜி.சி.டி - தடாகம் சாலை - கனுவாய் - துடியலூர் - மேட்டுப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள்:

துடியலூர் - வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம் - உடையம்பாளையம் - மணியக்காரன்பாளையம் - கணபதி - காந்திபுரம். அல்லது கவுண்டர் மில்ஸ் - உருமாண்டம்பாளையம் - உடையப்பாளையம் - மணியக்காரன்பாளையம் - சங்கனூர் எரு கம்பெனி - காந்திபுரம் வழியாக செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்கள் மட்டும் வழக்கம் போல மேட்டுப்பாளையம் சாலையில் செல்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராஜாமணி செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...