கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

கோவை: கோவை கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வார்டு எண் 5 முதல் 9 வரையிலும் வார்டு எண் 16 முதல் 19 வரையிலும் உள்ள வார்டுகளுக்கு பவானி குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.

இத்தகவல் மாநகராட்சி நிர்வாகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி பகுதி மக்களுக்கு பெரும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...