3-ம் தேதி குரூப் 1 தேர்வு; 24 மையங்கள் தயார், சிறப்பு பஸ்கள் இயக்கம்: கலெக்டர் ராசாமணி தகவல்!

கோவை: வரும் 3-ம் தேதி குரூப் 1 தேர்வுக்காக 24 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் ராசாமணி கூறியுள்ளார்.


கோவை: வரும் 3-ம் தேதி குரூப் 1 தேர்வுக்காக 24 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கலெக்டர் ராசாமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 1 தேர்வு வரும் 3-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன. மொத்தம் 40 தேர்வுக் கூடங்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11,887 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு இணையத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு மையங்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இத்தேர்வினை சிறப்பாக நடத்தும் வகையில் 9 மொபைல் அலுவலர்கள், 40 தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 40 தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமலிருக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும் `கோவிட்-19' தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வுகளுக்குப் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு வசதி செய்யப்படுகிறது. தேர்வாளர்கள் 9.15 மணிக்கு தேர்வுக் கூடத்துக்குள் செல்ல வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. 9.15- க்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விடைத்தாள்களில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிறமுடைய பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பென்சில் மற்றும் ஏனைய மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. விடைத்தாளில் உரிய இடங்களில் இரண்டு இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் படாமலும், விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமல் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். விடைத்தாளில் உள்ள கேள்விகள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் `ஓ.எம்.ஆர்' என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.

`ஓ.எம்.ஆர்' விடைத்தாளில் `ஏ.பி.சி.டி' மற்றும் `இ' என்ற ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கபட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமை பார்க்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை தவறும்பட்சத்தில் தேர்வில் பெறும் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆதலால் இதனை கவனத்துடன் பிழை இல்லாமல் சரியாக எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிந்த பிறகு 15 நிமிடங்கள் செயல்பாட்டினை செய்து முடித்து விடைத்தாளில் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து இணையம் வழியாக தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...