கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள்: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் பேருந்துகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையின் வழித்தட வரைபடம் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று முதல் பேருந்துகள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையின் வழித்தட வரைபடம் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி திருமண மண்டபம் வரை 1.20 கிலோ மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் ரூ.66 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஜி.என்.மில் சந்திப்பில் 0.60 கிலோ மீட்டர் நீளம், 17.20 கிலோ மீட்டர் அகலத்தில் ரூ.41.88 கோடி மதிப்பிலான மேம்பாலப் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் மேட்டுப்பாளையம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. இந்நிலையில், மேம்பாலப் பணி காரணமாக இன்று முதல் கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய வழித்தட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காந்திபுரத்தில் இருந்து கவுண்டம்பாளையம், துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்று வந்த புறநகர் பேருந்துகள் இன்றுமுதல் காந்திபுரம், டி.வி.எஸ், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வேலாண்டிபாளையம், கணுவாய் வழியாக துடியலூர் சென்றடையும். பிறகு அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து துடியலூர், கவுண்டம்பாளையம் வழியாக காந்திபுரம் வரும் புறநகர் பேருந்துகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மணியகாரன்பாளையம், சத்தி சாலை, கணபதி வழியாக காந்திபுரம் செல்லும்விதமாக வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம், சேரன் நகர், கவுண்டர் மில், வெள்ளக்கிணர் பிரிவு வழியாக துடியலூர் சென்ற நகரப் பேருந்துகள் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா கோயில், சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், டி.வி.எஸ்.நகர், காசிநஞ்சேகவுண்டன்புதூர் பிரிவு, காசிநஞ்சேகவுண்டன் புதூர், கவுண்டர் மில், வெள்ளக்கிணர் பிரிவு வழித்தடத்தில் துடியலூர் சென்றடையும். துடியலூரில் இருந்து எதிர் மார்க்கமாக உக்கடத்துக்கு பேருந்துகள் இயங்குமாறும் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...