கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிதாக கட்டப்பட்ட 95 பூக்கடைகள் விரைவில் ஏலம் விடப்படும் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மலர் அங்காடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் மலர் அங்காடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூமார்க்கெட் செயல்பட்டு வந்தது. அதில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் பூமார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கர் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டன. தற்காலிகமாக தற்போதும் அங்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணியானது, கடந்த ஆண்டு மே மாதம் துவங்கியது. இந்த பணிகள் தற்போது 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்ட புதிய கடைகள் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 கடைகள் ஏலம் மூலமாக வியாபாரிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும். இதற்கான ஏலம் விரைவில் விடப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...