வரும் 19-ந்தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!

சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்காக வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.


சென்னை: 10, 12-ம் வகுப்புகளுக்காக வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 20-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக நேற்றிரவே செய்திகள் கசிந்தன. இந்நிலையில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டபோது, பெரும்பாலானோர் பள்ளிகள் திறக்கக் கோரியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...