கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு!

கோவை: கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.


கோவை: கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

கோவையில் அமைந்துள்ள சுற்றுலாத்தளமான கோவை குற்றாலம் கொரோனா தொற்று மற்றும் புயல் மற்றும் பருவமழை காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு, சமூக இடைவெளி, மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பல்வேறு அரசு நடவடிக்கைகள் கையாளப்பட்டது. இதற்கிடையே பருவமழை பெய்ததையடுத்து மீண்டும் அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 7-ம் தேதி இரவு மழை பெய்தது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்தது. மழை தொடர்ந்ததால் மறுநாள் காலை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்ததாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் நேற்று காலை தடை நீக்கப்பட்டது. சாரல் மழை காணப்பட்டதால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...