இந்தியாவில் மேலும் 4 கொரோனா தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன: மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் நான்கு கோவிட் 19 தடுப்பூசிகள் தயாராகி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


புதுடெல்லி: இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் நான்கு கோவிட் 19 தடுப்பூசிகள் தயாராகி வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் (கோவிட் 19) இந்தியாவிலேயே தயாரானவை. இந்த தடுப்பூசிகள் இன்னும் சில தினங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இதன்மூலம் வரும் 16-ந்தேதி முதல் ஏறக்குறைய மூன்று கோடி சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு `கோவிட் 19' தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்த தடுப்பூசி இயக்கம் தொடங்கப்படவிருக்கிறது.

இதற்கிடையே, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா (கோவிட் 19) தடுப்பூசிகளைத் தவிர மேலும் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவற்றின் உற்பத்தியாளர்கள் விரைவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்காக மருந்துக் கட்டுப்பாடு ஆணையத்தை அணுகலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாலர் ராஜேஷ்பூஷன் கூறும்போது, இந்தியாவில் தற்போது வெளிவந்துள்ள தடுப்பூசிகளைத் தவிர மேலும் நான்கு தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. ஜைடஸ் காடிலா, ஸ்புட்னிக் வி, பயோலாஜிக்கல் இ மற்றும் ஜெனோவா ஆகியவை இந்தியாவிலுள்ள மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் உள்ள மற்ற தடுப்பூசிகளாகும். வரவிருக்கும் நாட்கலில் இந்த தடுப்பூசிகளில் சில அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்துக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுகவுள்ளது' என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...