டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் 15ஆம் தேதி யானை பொங்கல் - கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில், வால்பாறை, டாப்ஸ்லிப் (உலாந்தி), மானாம்பள்ளி, பொள்ளாச்சி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன.



டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் 15ஆம் தேதி யானை பொங்கல் - கொரோனா நோய் பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில், வால்பாறை, டாப்ஸ்லிப் (உலாந்தி), மானாம்பள்ளி, பொள்ளாச்சி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன.

யானை பொங்கல்







டாப்ஸ்லிப் அருகே உள்ள கோழிகமுத்தி முகாமில், வனத்துறை சார்பில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 



ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கோழிகமுத்தி யானைகள் முகாமில், உள்ள யானைகளை டாப்ஸ்லிப் பகுதிக்கு அழைத்துவந்து, அங்குள்ள பழங்குடியின மக்கள், யானைக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். 

குவியும் சுற்றுலா பயணிகள்







இந்த யானை பொங்கல் நிகழ்ச்சிக்கு, பொள்ளாச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நிகழ்வின் போது, வரிசையாக யானைகளை நிற்க வைத்து, அவற்றுக்கு சிறப்பு உணவு மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்வது வழக்கம். 

சுற்றுலாவிற்கு தடை 

இந்த ஆண்டு டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் வரும் 15ஆம் வரும் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஆண்டு யானை பொங்கல் நிகழ்ச்சி கோழிகமுத்தி முகாமிலேயே நடைபெறும் என்றும், இதற்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி இல்லை என்றும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...