வள்ளலார்‌ தினமான 28-ந்தேதி ஆடு, கோழி, மாட்டிறைச்சி கடைகள்‌ செயல்படாது: கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவிப்பு!

கோவை: வள்ளலார்‌ தினமான வரும் 28-ந்தேதி கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக்கடைகள்‌ செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன் கூறியுள்ளார்.


கோவை: வள்ளலார்‌ தினமான வரும் 28-ந்தேதி கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக்கடைகள்‌ செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்‌ பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2021-ம்‌ ஆண்டு 28-ந் தேதியன்று “வள்ளலார்‌ தினம்‌” அனுசரிக்கப்படுவதால்‌ அன்றைய தினம்‌ தமிழக அரசால்‌ ஆடு, மாடு மற்றும்‌ கோழிகளை வதை செய்வதும்‌, இறைச்சிகளை விற்பனை செய்வதும்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியால்‌ நடத்தப்பட்டு வரும்‌ உக்கடம்‌ ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர்‌ ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும்‌ போத்தனூர்‌ மாடு அறுவைமனைகள்‌, துடியலூாரில்‌ ஆடு அறுவைமனை மற்றும்‌ மாநகராட்சியில்‌ கீழ்‌ இயங்கும்‌ 10 மாநகராட்சி இறைச்சிக்‌ கடைகள்‌ செயல்படாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடமையான நடவடிக்கை எடூக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...