கோவையில் வரும் 31-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்:‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்‌!

கோவை: கோவையில் வரும் 31-ந்தேதி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், கோயம்புத்தூர்‌ மாநகரில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்களது‌ 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: கோவையில் வரும் 31-ந்தேதி போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், கோயம்புத்தூர்‌ மாநகரில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்களது‌ 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய போலியோ நோய்‌ ஒழிப்புத்‌ திட்டத்தின்கீழ்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வரும்‌ 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநகராட்சியின்‌ சார்பில்‌ போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும்‌ முகாம்கள்‌ நடைபெறவுள்ளது. இம்முகாம்‌ காலை 7மணி முதல்‌ மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்‌.

இதற்காக அனைத்து மாநகராட்சி நகர்‌ நல மையங்கள்‌, மருந்தகங்கள்‌, சத்துணவுக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளிலுள்ள அனைத்து தனியார்‌ மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகள்‌ முதல்‌ 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்‌ இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து வரும்‌ குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும்‌ வகையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌, இரயில்‌ நிலையம்‌, 5 பேருந்து நிலையங்கள்‌ மற்றும்‌ 5 நடமாடும்‌ ஊர்திகள்‌ ஆகியவற்றில்‌ சிறப்பு முகாம்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன.

மாநகரப்‌ பகுதிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்‌ வழங்கப்படவுள்ள போலியோ நோய்‌ தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும்‌ பாதுகாப்பானதாகும்‌. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகரில்‌ வசிக்கும்‌ அனைத்து பொதுமக்களும்‌ தங்களது‌ ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான நோய்வாய்ப்பட்டிருந்தாலும்‌கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும்‌ போலியோ நோய்த்‌ தடுப்பு சொட்டு மருந்து வழங்கலாம்.

இதன்மூலம் நமது மாநகராட்சிப்‌ பகுதியிலிருந்து போலியோ நோயை அறவே ஓழித்திட அனைவரும்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...