நீலகிரி மாவட்டத்தில்‌ இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில்‌ உள்ளது - மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா இ.ஆ.ப., தகவல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ இ-பதிவு முறை தொடர்ந்து அமலில்‌ உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ இ-பதிவு முறை தொடர்ந்து அமலில்‌ உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா இ.ஆ.ப., அவர்கள்‌ செய்தியாளர்களிடம்‌ தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில்‌ சுற்றுலா தலங்கள்‌ அதிகமாக உள்ளது. இதனை கண்டுகளிக்க பல்வேறு மாவட்டம்‌ மற்றும்‌ மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள்‌ வந்து கொண்டே இருக்கிறார்கள்‌.

மேலும்‌, சுற்றுலாப் பயணிகளுக்கு முகக்கவசம்‌ அணிவது குறித்து தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ விழிப்புணர்வு பணிகள்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌, முகக்கவசம்‌ அணியாத நபர்களுக்கு அபராதமும்‌ விதிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஏற்கெனவே உள்ள இ-பாஸ்‌ என்ற முறையை மாற்றி அமைத்து, இ-பதிவு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதனடிப்படையில்‌, வெளிமாவட்டத்திலிருந்து நமது மாவட்டத்திற்குள்‌ நுழைவதற்கு இ-பதிவு என்ற முறை தொடர்ந்து அமலில்‌ இருந்து வருகிறது.

எனவே, சுற்றுலாப் பயணிகள்‌, வெளிமாவட்டம்‌ மற்றும்‌ வெளிமாநிலங்களிலிருந்து நமது மாவட்டத்திற்கு வரும்‌ நபர்கள்‌ அனைவரும்‌ இ-பதிவு மூலம்‌ பதிவு செய்து வருகை தர வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்‌ திவ்யா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...