கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலைவாய்ப்பு திட்டத்தின்‌ மூலம்‌ புதிய பட்டதாரிகள் பணிபுரிய ஓர்‌ அரிய வாய்ப்பு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலை வாய்ப்பு திட்டத்தின்‌ மூலம்‌ புதிய பட்டதாரிகள்‌ பணிபுரியும்‌ வகையில்‌ ஓர்‌ அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.



கோவை: கோவை மாநகராட்சியில்‌ நகர்ப்புற கற்றல்‌ வேலை வாய்ப்பு திட்டத்தின்‌ மூலம்‌ புதிய பட்டதாரிகள்‌ பணிபுரியும்‌ வகையில்‌ ஓர்‌ அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த திட்டம்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற அலுவல்‌ அமைச்சகம்‌ (MOHUA) மற்றும்‌ அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்‌ (AICTE) ஆகியவற்றுக்கும்‌ இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்‌. TULIP திட்டத்தின்கீழ்‌ புதிய பட்டதாரிகள்‌ தன்னம்பிக்கை பெறுவதற்கும்‌ மாநகராட்சிக்கு புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும்‌ அரிதான வாய்ப்பினை அளிக்க கோவை மாநகராட்சி முன்வந்துள்ளது. இத்திட்டத்தில்‌ பயன்பெற,

1. விண்ணப்பதாரர்கள்‌ கடந்த 18 மாதங்களுக்குள்‌ பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்‌.

2. இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம்‌ அதிக பட்சம்‌ ஒரு வருடம்‌ ஆகும்‌.

* பி.ஏ., பி.எஸ்‌.சி, பட்டதாரிகளுக்கு ரூ.7000/-

* பொறியியல்‌ பட்டதாரிகளுக்கு ரூ.10,000/-

* முதுநிலை சமூகப்பணி பட்டதாரிகளுக்கு ரூ.10,000/-

* பட்டதாரி வழக்கறிஞாகளுக்கு ரூ.10,000/- என உதவித்‌ தொகை வழங்கப்படும்‌.

3. மாநகராட்சியின்‌ பணி சூழல்‌ பட்டதாரிகளுக்கு சவாலான தளமாகும்‌. இது அவர்களை அடுத்த நிலைக்கு தயாராக்குகிறது.

4. தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழுவதிலும்‌ உள்ள வாய்ப்புகளை ஓரே மேடையில்‌ ஒருங்கிணைத்து நகர்ப்புற நிர்வாகத்தில்‌ விண்ணப்பிக்க இத்திட்டம்‌ அனுமதிக்கிறது.

5. ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2021 என ந்ணயிக்கப்பட்டுள்ளது. இணைய வலைத்தளம்‌ http://internship.aicte-india.org மொத்தம்‌ 42 பணியிடங்கள்‌ உள்ளன.

மேலும்‌, ஒவ்வொரு பிரிவிலும்‌ உள்ள பயிற்சிகால காலி பணியிட விவரங்களை இணையதளத்தில்‌ அறியலாம்‌. ஆர்வமுள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும்‌ இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்‌ என மாநகராட்சி நிர்வாகத்தால்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...