தேர்தல் விதி அமலில் இருப்பதால் மொத்தமாக மதுபானம் எடுத்துச் சென்றால் நடவடிக்கை: கோவை கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை!

கோவை: தேர்தல் விதி அமலில் இருப்பதால் மொத்தமாக மதுபானம் எடுத்துச் செல்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: தேர்தல் விதி அமலில் இருப்பதால் மொத்தமாக மதுபானம் எடுத்துச் செல்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை கலெக்டர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மது பாட்டில்களை மொத்தமாக கொண்டுசென்றால் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை பாயும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் கிடைக்கும், மதுபான கடத்தல் புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக மதுபானங்கள் கடத்தினால், டாஸ்மாக் மேலாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். உதவி மேலாளர் கணக்கு அலுவலர் (கோவை வடக்கு) 97881 77068, கோவை தெற்கு 93441 21629 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவர்களுடன், பறக்கும் படை குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...