கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு நாளை முதல் கட்டாய இ-பாஸ் அமுல்!

கோவை: கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு நாளை முதல் கட்டாய இ-பாஸ் அமுல்படுத்தப்படுகிறது.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு நாளை முதல் கட்டாய இ-பாஸ் அமுல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அண்டை மாநிலமான கேரளாவில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளதால், எல்லையோரப் பகுதியான கோவை மாவட்டம் வழியாக தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் கட்டாய இ-பாஸ் முறை அமுல்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 40 -50 என்ற அளவில் கண்டறியப்பட்டாலும், ஒரே பகுதியில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருக்கும் அளவுக்கு நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம். பொது மக்களும் ஒத்துழைப்பு தந்து முகக் கவசம் அணிவது, ஹேன்ட் சானிடைஷரை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றை மேலும் கட்டுப்படுத்த முடியும் என்று கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

நாளை முதல் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றும், 15-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் இருந்தாலும் ஆனைக்கட்டி, வாலையாறு, ஆனைமலை, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 6 முக்கிய சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா சென்று வருபவர்கள் தமிழகம் திரும்பும்போது கட்டாயம் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்ற பிறகே உள்ளே வர வேண்டும், இது வர்த்தக போக்குவரத்து வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். மேலும் ரயில் வழி போக்குவரத்து மூலம் நோய் பரவுவதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா மற்றும் தேர்தல் காலத்தை கணக்கில்கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தேர்தல் நேரத்தில் எல்லைப் பகுதிகள் மூடப்படாது என்றும் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...