வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு கையுறை, கிருமி நாசினி: கோவை கலெக்டர் தகவல்!

கோவை: வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்குவதுடன் கையுறையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் தெரிவித்தார்.


கோவை: வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி வழங்குவதுடன் கையுறையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றை கணக்கில்கொண்டு தொற்றினைக் கட்டுக்குள் வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமான நடவடிக்கைளாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன் அணிய கையுறையும், பின் கிருமி நாசினியும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, வாக்குப்பதிவு எந்திரத்தை வெறும்‌ கைகளால் தொடுவதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதால், அதை தடுக்கும்விதமாக வாக்காளர்களுக்கு ஒரு கைக்கு கையுறை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர அரசு தரப்பில் இருந்து வலியுறுத்துவதாகவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்களின் உடல் வெப்பத்தைக் கண்காணிக்கவும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும் 2 தன்னார்வலர்கள் என 4,227 வாக்குச்சாவடிகளுக்கும் ஏறத்தாழ பத்தாயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்குச் சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உடைகள் வழங்கப்படும். வாக்குப் பதிவு முடிந்த பின் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள், கையுறை போன்ற மருத்துவக் கழிவுகளை அகற்றும் ஒப்பந்ததாரர்களைக் கொண்டு முறையாக அப்புறப்படுத்தப்படும். மருத்துவக் கழிவை அகற்றும் வாகனங்களில் கூடுதலாக இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் 22,150 பணியாளர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படும். பின்னர், 26-ஆம்‌ தேதி மாதிரி வாக்குப்பதிவு பயிற்சியும், யார் யார் எந்த தொகுதிக்கு பணியமர்த்தப்படுவார்கள் என்று தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர், ஏப்ரல் 5-ஆம் தேதி இரண்டாவது முறையாக வாக்குச்சாவடி பணியாளர்கள் எந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...