கொரோனா பரவல் எதிரொலி: பள்ளிகள் அனைத்தையும் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு!

கோவை: கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா தொற்று காரணமாக 12-ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பள்ளிகளை கல்வித் துறை கண்காணித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. கோவையில் கொரோனா தொற்று காரணமாக, இன்று முதல் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே, பள்ளிகள் திறந்திருக்கும்.

எனவே, அனைத்து பள்ளிகளையும், கல்வித்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் நுழைந்ததும், தினசரி கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், உடல் வெப்பநிலை சரிபார்த்தல் உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை, அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதேபோல, சிலபஸ் முடித்து விட்டதால், இனிவரும் காலங்களில், பாடங்களை பிரித்து தேர்வு நடத்தி, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...