கோவையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சிறப்பு தொழில்நுட்ப அதிநவீன கட்டுப்பாட்டு அறை அமைப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், தடாகம் ரோடு, அரசு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், தடாகம் ரோடு, அரசு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, மாவட்ட ஆட்சியர் நாகராஜன், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில், பத்து தொகுதிகளுக்கும் தனித்தனியாக, ஓட்டு இயந்திர பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறைகளில், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள், முழு வீச்சில் நடக்கின்றன. கேமராக்களால், வளாகம் முழுவதையும் கண்காணிப்பதற்கான, நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையிலும், வளாகம் முழுவதிலும், மத்திய பாதுகாப்பு படையினர், தமிழக போலீசார் ஆகியோர் கொண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து, மாநகராட்சி, பொதுப்பணித்துறையினருக்கு உரிய உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், ஓட்டு எண்ணிக்கை மைய கண்காணிப்பு அலுவலர் மேனகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...