நாளை ஊதியத்துடன் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் குறித்து புகார் செய்யலாம்: தொழிலாளர் துறை அறிவிப்பு

கோவை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாளை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.



கோவை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாளை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

தொழிலாளர்துறை கோவை உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதால், தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தகம், உணவு, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட, அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும்.

அவ்வாறு, விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார் தெரிவிக்க, 0422–224 1136 என்ற தொழிலாளர் துறை அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், கோவை தொழிலாளர் உதவி ஆணையரை, 99411 21001, கோவை உதவி ஆய்வாளர்களை, 80563 88846, 98430 29910 என்ற எண்களிலும், பொள்ளாச்சி உதவி ஆய்வாளர்களை, 82203 94840, 94421 77831 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...