கோவை கொரோனா முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை: கொரோனா முழு ஊரடங்கை பொதுமக்கள்‌ கடைபிடிக்கிறார்களா என்பதை மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.



கோவை: கொரோனா முழு ஊரடங்கை பொதுமக்கள்‌ கடைபிடிக்கிறார்களா என்பதை மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; 

“கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ அரசு ஆணையின்படி இரவு 10.00 மணி முதல்‌ காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கை மக்கள்‌ முழுமையாக கடைபிடிக்க வேண்டும்‌. 

இரவு ஊரடங்கின்போது எந்தவித வாகன போக்குவரத்திற்கும்‌ அனுமதி இல்லை. மாநகராட்சி பகுதியில்‌ உள்ள தனியார்‌ மற்றும்‌ வெளியூர்‌ பேருந்து நிலையம்‌ உள்பட அனைத்து பேருந்து நிலையங்களும்‌ மூட வைக்கப்படும்‌. அவசர மற்றும்‌ மருத்துவ தேவைகளுக்கான வாகன போக்குவரத்திற்கு மட்டும்‌ அனுமதி உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில்‌ கடைபிடிக்கப்படும்‌ முழு ஊரடங்கு அன்று இறைச்சி கடைகள்‌, மீன்‌ மார்க்கெட்‌, காய்கறி கடைகள்‌ திறக்கப்படக்கூடாது. சினிமா தியேட்டர்‌, வணிக வளாகங்கள்‌ திறக்கப்படக்கூடாது. பால்‌ விநியோகம்‌, பத்திரிக்கை விநியோகம்‌, மருந்துக்கடைகள்‌, மருத்துவமனைகள்‌, மருத்துவ ஆய்வகங்கள்‌ செயல்படலாம்‌. 

ஞாயிற்றுக்கிழமைகளில்‌ கடைப்பிடிக்கப்படும்‌ முழு ஊரடங்கு அன்று உணவகங்களில்‌ காலை 6 மணி முதல்‌ 10 மணி வரை, நண்பகல்‌ 12 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை மற்றும்‌ மாலை 6 மணி முதல்‌ இரவு 9 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்பட வேண்டும்‌. ஸ்விக்கி, சொமோட்டா போன்ற உணவு சேவை நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கு நாட்கள்‌ உள்பட அனைத்து நாட்களிலும்‌ திருமணம்‌ போன்ற விழாக்களில்‌ 100 நபருக்கு மிகாமலும்‌, இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படும். 

மாநகராட்சி பூங்காக்கள்‌, உயிரியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ உள்ளிட்டவைகளுக்கு அனுமதி இல்லை என்ற தகவல்‌ பலகை வைக்கப்பட வேண்டும்‌. முன்னரே அனுமதி பெற்றிருந்த மதம்‌ சார்ந்த திருவிழாக்களில்‌ 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கலாம். பறக்கும்‌ படையினரால்‌ பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, திரைஅரங்குகள்‌, உணவகங்கள்‌ முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்‌. மேற்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மக்களும்‌, நிறுவனங்களும்‌ பின்பற்றுவதை மாநகராட்சி அலுவலார்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌. 

மேலும்‌, மாநகராட்சியின்‌ நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்‌. மூன்று வீடுகளுக்கு மேல்‌ நோய்‌ தொற்று இருக்கும்‌ வீதிகள்‌ கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும்‌. நோய்‌ கண்டறியும்‌ பரிசோதனைகள்‌ தீவிரப்படுத்தப்பட வேண்டும்.  இப்பணிகளை லேப்‌ டெக்னீசியன்கள்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌, தனியார்‌ மருத்துவமனைகள்‌ மூலம்‌ மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை உதவி ஆணையாளர்‌ நிர்வாகம்‌ மற்றும்‌ நகர்நல அலுவலர்‌ எடுக்க வேண்டும். நடமாடும்‌ நோய்‌ கண்டறியும்‌ பரிசோதனை Galihleeit (Mobile Sample testing vehicles) மீண்டும்‌ நடைமுறைப்படுத்தப்படவும்‌ அதன்‌ கட்டமைப்பு பணிகளையும்‌ மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ நகர் நல அலுவலர்‌ மேற்கொள்ள வேண்டும்‌. 

மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு அறை மூலமாக வீட்டில்‌ தனிமைப்படுத்தப்பட்டவர்களை (Home Isolation) முறையாக கண்காணிக்க வேண்டும்‌. DBC பணியாளர்கள்‌ மூலமாக வீடூ வீடாக நோய்‌ கண்டறியும்‌ சாவே எடுக்கப்பட்டு அதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்‌. ஓவ்வொரு மண்டலத்திலும்‌ நாளொன்றுக்கு குறைந்தது 20 கொரோனா மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்பட வேண்டும்‌. மண்டல சுகாதார அலுவலர்கள்‌ வீதி வாரியாக தொற்று பாதித்த விவரங்களை பெற்று கண்காணித்திட வேண்டும்‌. 

இதன் விவரங்களை ஆணையாளருக்குத் தெரியப்படுத்த  வேண்டும்‌. கொரோனா தடுப்பூசி முகாம்கள்‌ தொய்வில்லாமல்‌ நடத்தப்பட வேண்டும்‌. கோவை மாநகராட்சி மேற்கொண்டுவரும்‌ கொரோனா தடூப்பு நடவடிக்கைகள்‌ தொடர்பான விபரங்களை மாநகராட்சி இணையதளத்தில்‌ பதிவிட நகார்நல அலுவலர்‌ அவர்கள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வண்டும்‌. மக்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடைமுறைகள்‌ தொடர்பான விழிப்புணர்வு விவரங்களை ஆடியோ மற்றும்‌ வீடியோ மூலமாக தெரியப்படுத்தி உதவி ஆணையாளர்கள்‌ நடவடிக்கை வேண்டும்.” இவ்வாறு பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ வலியுறுத்தி உள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...