கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நேர விவரம் அறிவிப்பு!

கோவை: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகளின் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து வெளியூா்களுக்கு தினமும் கடைசியாக இயக்கப்படும் பேருந்துகளின் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

“கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், இரவு 9 மணிக்கு அந்தந்த ஊர்களைச் சென்றடையும் விதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை, காந்திபுரத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு 33 சொகுசுப் பேருந்துகள் காலை 5 மணி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களுக்கு காந்திபுரத்தில் இருந்து கடைசி பேருந்து காலை 11 மணிக்கு புறப்படும்.

சிங்காநல்லூரில் இருந்து மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, கரூர் உள்ளிட்ட வெளியூா்களுக்கு காலை 5 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும். இதில், கரூருக்கு கடைசிப் பேருந்து இரவு 7 மணிக்கும், திருச்சி, மதுரை, தேனி ஆகிய பகுதிகளுக்கு மாலை 5 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன் பிறகு, மறுநாள் காலையில் தான் பேருந்துகள் இயக்கப்படும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, சத்தியமங்கலம், திருப்பூர், தாராபுரம் உள்ளிட்டபகுதிகளுக்கு காலை 4.30 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும்.

கடைசிப் பேருந்து சேலத்துக்கு மாலை 6 மணிக்கும், ஈரோட்டுக்கு மாலை 7 மணிக்கும், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூா், தாராபுரம்பகுதிகளுக்கு இரவு 8 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படும்.

உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு கடைசிப் பேருந்து இரவு 8.30 மணிக்கும், பழநிக்கு மாலை 7 மணிக்கும் இயக்கப்படும். நகரப் பேருந்துகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு அந்தந்த வழித்தடத்தில் கடைசிப் பேருந்துகளாக இயக்கப்படும்.” இவ்வாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...