கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்... கோவை ஆணையாளர் வேண்டுகோள்..!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌த் தொற்றுப் பரவலை தடுப்பது குறித்து ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவிக்கையில், ‘‘கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ நோய்‌த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக கொரோனா நோய்‌த் தொற்றுப் பாதிக்கப்பட்டு நோயுடன்‌ வீடுகளில்‌ தனிமைப்படுத்திக்‌ கொண்டு இருப்பவர்கள்‌, வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. பாதிப்பிற்குள்ளாகி வீடுகளில்‌ தனிமைப்படுத்திக்‌ கொண்டவர்கள்‌ வீடுகளை அடைத்து வைக்கப்படும்‌. அவர்களுக்குத்‌ தேவைப்படும்‌ அத்தியாவசிய சேவைகள்‌ மாநகராட்சி மூலம்‌ வழங்கப்படும்‌.

ஒரே தெருவில்‌ மூன்று வீடுகளுக்கு மேல்‌ நோயால்‌ பாதிக்கப்பட்டிருக்கும்‌ நிலையில்‌, அந்தத் தெரு முழுமையும்‌ தடுப்பு அமைத்துக்‌ கண்காணிக்கப்படும்‌. தடுப்பு அமைத்தல்‌ மற்றும்‌ தடுப்பூசி போடுதல்‌ போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ மற்றும்‌ குடியிருப்பு நலச்‌ சங்கங்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌. நோய்‌ பரவுதல்‌ அதிகம்‌ காணப்படும்‌ பகுதிகளில்‌ வாரச்‌ சந்தைகள்‌ கூட்ட நெரிசலைத்‌ தவிர்க்கும்‌ வண்ணம்‌ செயல்படத்‌ தவறும்‌ பட்சத்தில்‌, அது முழுமையாக மூடிவைக்கப்படும்‌.

உணவகங்கள்‌, பேக்கரிகள்‌ மற்றும்‌ தேநீர் கடைகளின்‌ முன்‌பு மக்கள்‌ சமூக இடைவெளி மற்றும்‌ முகக்கவசம்‌ இல்லாமல்‌ நின்றிருந்தால்‌, அந்தக்‌ கடைகள்‌ ஒரு வார காலத்திற்கு மூடி வைக்கப்படும்‌. பொதுமக்கள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும்‌, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து கோவிட்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கும்‌ பொது மக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஓத்துழைப்பு வழங்குமாறும்'' மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ கேட்டுக்கொண்டார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...