டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்!

கோவை: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மளிகை, பால் கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 8 மணிக்கு திறந்து நண்பகல் 12 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பின் போது மது கடைகள் மூடப்படுகின்றன. இதனால் மதுப்பிரியர்கள் மொத்தமாக சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழலில் கட்டுப்பாடுகள் நாளை முதல் மேலும் தீவிரப்படுத்தப் படுவதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...