கொரோனா பரவல்: கோவை மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தி வைப்பு - மாவட்ட நிர்வாக அதிகாரி தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை உறுதி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை உறுதி திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து விட்டது. மேலும் தினமும் 3 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாநகராட்சி, துடியலூர், சூலூர் ஆகிய பகுதிகளில் தான் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன.

இந்த நிலையில், கொரோனா தொற்று கோவையில் வேகமாக பரவி வருவதாலும், முழு ஊரடங்கு காரணமாகவும் வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 100 நாட்கள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாள் கூலியாக வேலையை பொறுத்து ரூ.230 வரை வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பணிக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாகவும் கோவையில் அதிகரித்து வரும் தொற்றை கருத்தில் கொண்டும் தற்போது முழுமையாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...