முழு ஊரடங்கு காலத்தில்‌ கோயம்புத்துர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ காய்கறி விற்பனை செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு..!

கோவை: பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் முழு ஊரடங்கு காலத்தில்‌ கோயம்புத்துர்‌ மாநகராட்சிப் பகுதிகளில்‌ காய்கறி விற்பனை செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


கோவை: பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் முழு ஊரடங்கு காலத்தில்‌ கோயம்புத்துர்‌ மாநகராட்சிப் பகுதிகளில்‌ காய்கறி விற்பனை செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையாளா்‌ மற்றும்‌ தனி அலுவலரான பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகத்தில்‌ தளர்வற்ற பொது முடக்கம்‌ அறிவிக்கப்பட்டு்ள்ள நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப் பகுதியில்‌ பொது மக்களின்‌ நலன்கருதி மொத்த காய்கறி வியாபாரம்‌ அனுமதிக்கப்படுகிறது. சில்லறை விற்பனை செய்யும்‌ வியாபாரிகள்‌ மொத்த காய்கறி வியாபாரிகளிடமிருந்து காய்கறிப் பழங்களை கொள்முதல்‌ செய்து கொள்ளலாம்‌.

சில்லறை வியாபாரிகள்‌ தங்களது சொந்த வாகனங்களில்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ வாடிக்கையாளர்களின்‌ வீடுகளுக்கு அருகாமையில்‌ காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கபபடுகிறார்கள்‌. எனவே, சில்லறை வியாபாரிகள்‌ வியாபாரத்திற்கு பயன்படுத்தும்‌ தங்களது வாகனங்களுக்கு மாநகராட்சியிடமிருந்து உரிய அனுமதி சீட்டைப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்‌. அதற்கு சம்பந்தப்பட்ட மண்டல மாநகராட்சி உதவி ஆணையர்கள்‌ / உதவி வருவாய்‌ அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

மாநகராட்சி மண்டல உதவி வருவாய்‌ அலுவலர்கள்‌ செல்லிடப்பேசி எண்கள்‌ விவரம்‌-

திரு மதுசூதனன்‌ - கிழக்கு மண்டலம்‌ - 9894065592

திருமதி மேனகா குமாரி - மேற்கு மண்டலம்‌ - 9894507629

திரு கார்த்திகேயன்‌ - வடக்கு மண்டலம்‌ - 9786631660

திரு மணி - தெற்கு மண்டலம்‌ - 9943997274

திருமதி ஆனந்தி - மத்திய மண்டலம்‌ - 9994056109

வியாபாரத்தின்‌ போது உரிய பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, போதிய சமூக இடைவெளி பின்பற்றுதல்‌, மேலும்‌, அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்துகொள்ளவும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...