கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில்‌ கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும்‌ விதமாக மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களான பேருந்து நிலையம்‌, காய்கறி அங்காடிகள்‌, இரயில்‌ நிலையம்‌, சந்தைகள்‌ மற்றும்‌ அரசு அலுவலகங்கள்‌ போன்றவற்றில்‌ தற்போது கிருமிநாசினி மாநகராட்சியால்‌ தெளிக்கப்பட்டு வருகிறது. இவை தவிர, கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்‌ ஆகியவற்றில்‌ கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின்‌ கோரிக்கையையேற்று மேலும்‌ சில இடங்களுக்கு இப்பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில்‌, தனியார்‌ ஒரு சிலர்‌, வீதிகளில்‌ கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி தடைசெய்யப்பட்ட மருந்துகளைக்‌ கொண்டு கிருமிநாசினி தெளிப்பதாகப் புகார்கள்‌ பெறப்படுகின்றன. எனவே, தனியார்‌ எவரும்‌ மாநகராட்சி பகுதிக்குள்‌ கிருமிநாசினி தெளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறுபவர்கள்‌ மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...