அசைவம் ஆன்லைனில்... கோழி இறைச்சி முட்டை விற்பனை குறித்த கோவை ஆணையாளரின் அறிவிப்பு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில்‌ கோழி, இறைச்சி மற்றும்‌ முட்டைகளை ஆன்லைன்‌ மூலம்‌ விற்பனை செய்வது குறித்த செய்திக் குறிப்பை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில்‌ கோழி, இறைச்சி மற்றும்‌ முட்டைகளை ஆன்லைன்‌ மூலம்‌ விற்பனை செய்வது குறித்த செய்திக் குறிப்பை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ அரசு ஆணைக்கிணங்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறிகள்‌, பழங்கள்‌, மளிகைப் பொருட்கள்‌ மொத்த வியாபாரம்‌ செய்யும்‌ வியாபாரிகள்‌ நேரக் கட்டுப்பாட்டுடன்‌ சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம்‌ செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

மேலும்‌, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர் மேலாண்மை துறையின்‌ அரசாணை எண்‌.386 நாள்‌ 22.05.2021 மற்றும்‌ அரசு முதன்மை செயலாளா்‌ (மீன்வளம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை) அவர்களின்‌ கடிதம்‌ எண்‌.7248/கால்நடை/2021 நாள்‌ 26.05.2021-ன்படி கோழி, இறைச்சி மற்றும்‌ முட்டைகளை ஆன்லைன்‌ மூலம்‌ விற்பனை செய்யவும்‌, அவ்வாறு விற்பனை செய்யும்‌ பொருட்களை மாநகராட்சி பகுதியில்‌ வாடிக்கையாளர்களின்‌ வீட்டிற்கே சென்று வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. என மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...